தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு


தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2019 10:46 AM GMT (Updated: 5 March 2019 5:39 AM GMT)

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது.

டி.ஆர்.பி.  அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ம் வகுப்புவரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்பு பெறலாம்.

6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு 15-3-2019-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் 5-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story