நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்


நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 3:26 PM GMT)

பணி புறக்கணிப்பு போராட்டத்துடன் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து கடந்த மாதம் 28–ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்துடன் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் உள்வாசல் பகுதியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆனந்த் சதீஷ், மணிகண்டன், கங்காராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story