சேத்தியாத்தோப்பு அருகே பெண் என்ஜினீயர், வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


சேத்தியாத்தோப்பு அருகே பெண் என்ஜினீயர், வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 9:12 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே பெண் என்ஜினீயர், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கனகவல்லி(வயது 21). என்ஜினீயரான இவர், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில், கனகவல்லி வி‌ஷம் குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனிடையே வெளியே சென்றிருந்த அவரது தாய் ராஜாராணி வந்தார். அங்கு மயங்கி கிடந்த மகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கனகவல்லியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் கனகவல்லி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story