வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 6:30 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆலங்குளம், 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஆசாரியர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கணேசராஜ் (வயது 27). பட்டதாரி வாலிபரான இவர், சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த கணேசராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கணேசராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை அருகே உள்ள விசுவநாதபுரம் இந்திரா தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஒரு விபத்தில் முருகேசனின் கை விரல்கள் சேதமடைந்தன. தனது மனைவி பிரிந்து சென்றதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story