தக்கலை அருகே விபத்து புதுமாப்பிள்ளை பலி; நண்பர்கள் படுகாயம் உருக்கமான தகவல்
தக்கலை அருகே நடந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். அவருடைய நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
பத்மநாபபுரம்,
குமரி மாவட்டம் தக்கலை அருகே ஆலங்கோடு நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 26), ஆலங்கோடு ஆலுவிளையை சேர்ந்தவர் சார்லஸ் (32), மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (25). மயிலோடு பகுதியை சேர்ந்தவர் அஜின் பிரகாஷ் (32), இவர்கள் 4 பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை 4 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் திங்கள்நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக கற்கள் ஏற்றி வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அஜின் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு டெம்போ நிற்காமல் சென்றது தெரிய வந்தது. அதனை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான அஜின் பிரகாஷ் பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
அஜின் பிரகாசுக்கு 2 தங்கைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். வெளிநாட்டில் வேலை பார்த்து கிடைத்த பணத்தில் 2 தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஊர் திரும்பிய அவர், உள்ளூரிலேயே கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். தற்போது அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. கடந்த வாரம்தான் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. நிச்சயதார்த்தம் முடிந்த ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே ஆலங்கோடு நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 26), ஆலங்கோடு ஆலுவிளையை சேர்ந்தவர் சார்லஸ் (32), மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (25). மயிலோடு பகுதியை சேர்ந்தவர் அஜின் பிரகாஷ் (32), இவர்கள் 4 பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை 4 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் திங்கள்நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக கற்கள் ஏற்றி வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அஜின் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு டெம்போ நிற்காமல் சென்றது தெரிய வந்தது. அதனை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான அஜின் பிரகாஷ் பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
அஜின் பிரகாசுக்கு 2 தங்கைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். வெளிநாட்டில் வேலை பார்த்து கிடைத்த பணத்தில் 2 தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஊர் திரும்பிய அவர், உள்ளூரிலேயே கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். தற்போது அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. கடந்த வாரம்தான் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. நிச்சயதார்த்தம் முடிந்த ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story