ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாலம் கட்டும் பணியால் 2 நாட்கள் ரெயில் சேவை ரத்து


ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாலம் கட்டும் பணியால் 2 நாட்கள் ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 7:46 PM GMT)

ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதோடு, வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர், ஈரோடு இடையேயான ரெயில்வே வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வருகிற 26, 29-ந் தேதிகளில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் (வ.எண்.56841) மற்றும் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரெயில் (வ.எண்.56825), கரூரில் இருந்து ஈரோடு வரையிலான சேவை மேற்கண்ட 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 26-ந் தேதி திருநெல்வேலி, ஈரோடு பயணிகள் ரெயில் (56826) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு புகளூருக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வரும். கோவை, நாகர்கோவில் விரைவு பயணிகள் ரெயில் மற்றும் பாலக்காடு, திருச்சி விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56712) ஈரோடு கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு சேலம் வழியாக நாமக்கல் வரை இயக்கப்படுகின்றன.

வருகிற 29-ந் தேதி திருநெல்வேலி, ஈரோடு பயணிகள் ரெயில் (வ.எண்.56826) வழக்கத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாக கரூர் வரும். நாகர்கோவில், மும்பை விரைவு ரெயில் (வ.எண்.16340) ஈரோடு மற்றும் கரூருக்கு வழக்கத்தை விட 15 நிமிடங்கள் தாமதமாக வரும்.

கோவை, நாகர்கோவில் விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56320) மற்றும் பாலக்காடு, திருச்சி விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56712) ஆகியவை ஈரோடு, கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு சேலம் வழியாக நாமக்கல் வரை இயக்கப்படு கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story