கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடந்தது


கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:49 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்னிலம்,

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நன்னிலத்தில் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க செயலாளர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், மாவட்ட துணைச்செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் கிளைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story