காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 14 March 2019 9:30 PM GMT (Updated: 14 March 2019 11:04 PM GMT)

காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே மித்ராவயல் முத்துமாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மித்ராவயல்-சாக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை மாத்தூர் பாண்டி மற்றும் நெற்புகப்பட்டி வர்ஷினி நந்தகுமார் வண்டியும், 2-வது பரிசை பல்லவராயன்பட்டி வர்சா இளமாறன் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கண்டனூர் பாலையூர் லெட்சுமி வண்டியும், 2-வது பரிசை உடப்பன்பட்டி சுப.சின்னையா வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் நாச்சியார் வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை மித்ராவயல் குஞ்சியப்பன் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கழனிவாசல் முனீஸ்வரர் வண்டியும், 3-வது பரிசை தட்டாகுடி முத்துமாரி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story