திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 9:34 PM GMT)

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் விக்னேஷ் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வேப்பம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக அயத்தூர் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அயத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதை பார்த்த டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story