கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது


கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2019 10:15 PM GMT (Updated: 20 March 2019 7:15 PM GMT)

மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்- சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூர் கிராமத்தில் அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 10 அட்டை பெட்டிகளில் 480 மதுபாட்டில்களும், 1,000 லிட்டர் சாராயமும் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் காரை ஓட்டிவந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜ் (வயது 47), வைத்தீஸ்வரன்கோவில் அருகே உள்ள கொண்டத்தூர் காலனித்தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் தினேஷ்குமார் (21) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கார்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக குத்தாலத்தை சேர்ந்த கமல் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story