எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை


எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 March 2019 10:15 PM GMT (Updated: 21 March 2019 7:02 PM GMT)

வலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் மோனிகா (வயது 22). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மோனிகா எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெற்றோர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மோனிகா உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story