நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 11:00 PM GMT (Updated: 25 March 2019 6:58 PM GMT)

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி, கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அதைத்தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனை ஆதரித்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

நீலகிரி, பவானிசாகர் தொகுதிகள் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை, இந்த தொகுதியை மாற்று கட்சியினர் எவராலும் அடையமுடியாது.

நமது கூட்டணி மகாகூட்டணி, பலமான கூட்டணி, மக்களுக்கு நன்மை பயக்கும் கூட்டணி, நீலகிரி தொகுதியில் நாம் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி எண்ணில் அடங்காத நலத்திட்டங்களை செய்து வருகிறோம்.

அ.ராஜா ஒரு ஊழல்வாதி, தி.மு.க.வினர் ஊழலுக்கு சொந்தக்காரர்கள். லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று இருந்துவிடக்கூடாது. வெற்றிக்காக கட்டெறும்பு போல சுற்றி, சுழன்று பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேட்பாளர் தியாகராஜன் வாக்கு கேட்டு பேசினார். பாரதீய ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், த.மா.கா மற்றும் கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அனைவரையும் சத்தி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.சி.வரதராஜ் வரவேற்று பேசினார்.


Next Story