ராசிபுரத்தில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பவர்ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் மைதானத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், முருங்கப்பட்டி, முத்துக் காளிப்பட்டி, குருசாமிபாளையம், சவுதாபுரம், வையப்பமலை, பட்டணம், வடுகம், ப.மு.பாளையம், தேங்கல்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
திருப்பூர், ஆத்தூர், அவினாசி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை ஏலத்திற்கு எடுத்தனர். இதில் 264 ஆர்.சி.எச். ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4,769 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,109-க்கு ஏலம் விடப்பட்டது. டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை.
நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 264 பருத்தி மூட்டைகள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story