ஓசூரில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

ஓசூரில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.
ஓசூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). விவசாயி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதேபோல், ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பன்னப்பள்ளியை சேர்ந்தவர் பிரேமா(40). இவரது கணவர் குர்ரப்பா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு முனிராஜ் மற்றும் நவீன்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பிரேமா, ஓசூரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அப்போது அவரது கடைக்கு நாகராஜ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் ஓசூர் அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நாகராஜின் தகாத உறவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் நாகராஜை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஓசூர் அண்ணா நகரில் உள்ள வீட்டில் நாகராஜூம், பிரேமாவும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரேமா உயிரிழந்தார். இதற்கிடையே நாகராஜ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






