வாலிபர் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை: விஷம் குடித்த தந்தையும் சாவு


வாலிபர் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை: விஷம் குடித்த தந்தையும் சாவு
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 6 April 2019 8:32 PM GMT)

பாளையங்கோட்டை அருகே வாலிபர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தாத்தா ஏற்கனவே இறந்தார். விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபரின் தந்தையும் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன் (வயது 40). இவருடைய மகன் ராஜா (20). கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா குளித்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து மார்பில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அவர் மீது அதிக அன்பு கொண்டிருந்த குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மனம் உடைந்த அவருடைய தந்தை முருகன், தாத்தா பெருமாள் ஆகியோர் விஷம் குடித்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 2-ந்தேதி பெருமாள் இறந்தார்.

முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாத்தா, மகன், பேரன் என ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்தது மேலக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story