விவசாயி கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


விவசாயி கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 8:10 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 51), விவசாயி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து தகராறில் அவரது தம்பி விஜயகுமார் மற்றும் 7 பேர் சேர்ந்து, அவரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் வாழப்பாடி பொன்னாரம்பட்டியை சேர்ந்த மகேஷ்வரன் (40), அரியாகவுண்டம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த மோகன சுந்தரம் (46) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் மகேஷ்வரன், மோகன சுந்தரம் ஆகிய இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று மகேஷ்வரன், மோகன சுந்தரம் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story