விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது


விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 April 2019 9:42 PM GMT (Updated: 11 April 2019 9:42 PM GMT)

விருதுநகரில் இரும்புக்கம்பியால் தாக்கி தாயைக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 


விருதுநகர் மருதநத்தம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி சுப்புத்தாய்(வயது 52). இவர்களது மகன் குருசாமி (26). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது தாயாரிடம் செலவுக்கு பணம் தருமாறு குருசாமி கேட்டுள்ளார். அப்போது சுப்புத்தாய் பணம் தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குருசாமி இரும்புக் கம்பியால் தாய் என்றும் பாராமல் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்புத்தாய் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஆமத்தூர் போலீசார் விரைந்து சென்று வாலிபர் குருசாமியை கைது செய்தனர்.

பெற்ற தாயை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story