தொல்.திருமாவளவன் பிரசாரத்தின் போது இளைஞர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளு-முள்ளு


தொல்.திருமாவளவன் பிரசாரத்தின் போது இளைஞர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளு-முள்ளு
x
தினத்தந்தி 12 April 2019 10:00 PM GMT (Updated: 12 April 2019 7:58 PM GMT)

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அங்கனூர் பகுதியிலுள்ள முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர் ஆகிய பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

செந்துறை,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அங்கனூர் பகுதியிலுள்ள முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர் ஆகிய பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆலத்தியூர் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஊருக்குள் பிரசாரம் செய்ய வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு துக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகையால் பக்கத்து தெரு வழியாக செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதனை மீறி அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அந்த வழியாகவே தொல்.திருமாவளவனை அழைத்து சென்றனர். அப்போது அப்பகுதி இளைஞர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதனை கண்ட குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களை தடுத்து சமாதானம் செய்து திருமாவளவனை அழைத்து சென்றார். ஊருக்கு வெளியே வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மேளங்கொட்டி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். இதனை கண்ட திருமாவளவன் அவர்களை கண்டித்ததோடு ஏன் துக்க நிகழ்ச்சி நடைபெறும் தெரு வழியாக என்னை அழைத்துச் சென்றீர்கள் என்று கடிந்து கொண்டார்.

Next Story