வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளின்படி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த வகையில் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 650 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.38,705 மதிப்பிலான நோட்டீசுகள், டீ–சர்ட்டுகள், கொடிகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு சோதனையில் ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்து 305 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story