இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 172 காலியிடங்கள்


இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 172 காலியிடங்கள்
x
தினத்தந்தி 15 April 2019 10:55 AM GMT (Updated: 15 April 2019 10:55 AM GMT)

இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணிக்கு 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய கடற்படை ராணுவத்தின் முப்பிரிவுகளில் ஒன்றாகும். இந்த படைப்பிரிவில் ஏராளமான பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மெக்கானிக்கல் பிரிவில் 103 பேரும், எக்ஸ்புளோசிவ் பிரிவில் 69 இடங்களும் உள்ளன. ‘குரூப்-பி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணியிடங்கள் நான்-கெசட்டடு தரத்திலானவை. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 28-4-2019-ந் தேதியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், புரொடக்சன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கெமிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் எக்ஸ்புளோசிவ் பிரிவு பணியில் சேரலாம்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வுநாள் இணையதளத்தில் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.joinindiannavy.gov.in மற்றும் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story