கோபி அருகே பரிதாபம்; குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
கோபி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கடத்தூர்,
சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் நந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கதிரேசன் (14). இதில் நந்தகுமார் 10-ம் வகுப்பும், கதிரேசன் 9-ம் வகுப்பும் படித்து தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.
கோடை விடுமுறையையொட்டி 2 பேரும் கோபி அருகே கருதாம்பட்டிபுதூரில் உள்ள உறவினர் லட்சுமணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இந்த நிலையில் நந்தகுமாரும், கதிரேசனும் திடீரென நேற்று மதியம் 12 மணி அளவில் குளிப்பதற்காக அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு நடந்து சென்றனர். அங்கு 2 பேரும் குட்டையில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில் சிறிதுநேரத்தில் நந்தகுமாரும், கதிரேசனும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே வெகுநேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் லட்சுமணன் அவர்களை தேடினார். அப்போது குட்டைக்கு சென்று பார்த்தார். அங்கு 2 பேரும் குட்டையில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குட்டையில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் நந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கதிரேசன் (14). இதில் நந்தகுமார் 10-ம் வகுப்பும், கதிரேசன் 9-ம் வகுப்பும் படித்து தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.
கோடை விடுமுறையையொட்டி 2 பேரும் கோபி அருகே கருதாம்பட்டிபுதூரில் உள்ள உறவினர் லட்சுமணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இந்த நிலையில் நந்தகுமாரும், கதிரேசனும் திடீரென நேற்று மதியம் 12 மணி அளவில் குளிப்பதற்காக அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு நடந்து சென்றனர். அங்கு 2 பேரும் குட்டையில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில் சிறிதுநேரத்தில் நந்தகுமாரும், கதிரேசனும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே வெகுநேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் லட்சுமணன் அவர்களை தேடினார். அப்போது குட்டைக்கு சென்று பார்த்தார். அங்கு 2 பேரும் குட்டையில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குட்டையில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story