தமிழகத்தில் நரேந்திரமோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி


தமிழகத்தில் நரேந்திரமோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 7:32 PM GMT)

மயிலாடுதுறை அருகே நீடூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே நீடூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை வித்தியாசமாக பிரசாரங்கள் செய்யப்படுகிறது. அவர்கள் செய்த சாதனைகள், செய்ய உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்துதான் கட்சி தலைவர்கள் அறிவித்து தேர்தலை சந்திப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் சர்வாதிகாரி நரேந்திரமோடி என்றும், அவரை அகற்ற வேண்டும் என்றும் பிரசாரம் செய்கின்றனர். நாடு முழுவதும் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர் மீது வெறுப்பு அலை வீசுகிறது. ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறாது. 40 தொகுதியிலும் மதசார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு பணநாயகத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் பணநாயகத்தை மக்கள் எதிர்க்க வேண்டும். எந்த ஒரு கட்சியும் ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story