வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 20 April 2019 10:30 PM GMT (Updated: 20 April 2019 7:35 PM GMT)

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கலியுக வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆதீனபரம்பரை தருமகர்த்தா கோவிந்தசாமி தலைமையில் கல்யாண சீர்வரிசைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Next Story