வள்ளியூரில் கடையில் புகுந்து பணத்தை திருடிவிட்டு பொருட்களுக்கு தீவைத்த மர்மநபர் போலீசார் விசாரணை


வள்ளியூரில் கடையில் புகுந்து பணத்தை திருடிவிட்டு பொருட்களுக்கு தீவைத்த மர்மநபர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 9:30 PM GMT (Updated: 21 April 2019 7:43 PM GMT)

வள்ளியூரில் கடையில் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர் அங்குள்ள பொருட்களுக்கும் தீவைத்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வள்ளியூர், 

வள்ளியூரில் கடையில் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர் அங்குள்ள பொருட்களுக்கும் தீவைத்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழைய இரும்புக்கடை

வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் தங்க தினகரன் (வயது 38). இவருக்கு சொந்தமான பழைய இரும்புக்கடை, வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ளது. நேற்று ஈஸ்டர் பண்டிகை விடுமுறை என்பதால் கடை திறக்கவில்லை.

இதை நோட்டமிட்ட மர்மநபர், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் கடைக்குள் புகுந்தார். அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரூ.13 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்த பழைய பொருட்களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.

தீயில் எரிந்து நாசம்

பின்னர் இரும்புக்கடையில் இருந்து புகை வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் இதில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் அருகில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story