வேறொரு வாலிபருடன் பழகியதால் கள்ளக்காதலியை கொன்றேன் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


வேறொரு வாலிபருடன் பழகியதால் கள்ளக்காதலியை கொன்றேன் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 April 2019 10:45 PM GMT (Updated: 28 April 2019 8:09 PM GMT)

வேறுறொரு வாலிபருடன் பழகியதால் கள்ளக்காதலியை கொன்றேன் என்று கைதான தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் கீதா (வயது 35). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும், தட்டு வண்டி தொழிலாளி ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த் அங்கு சென்ற போது அவருக்கும், கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

இது குறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது பற்றி போலீசார் கூறியதாவது:–

ஆனந்துக்கும், கீதாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால் கீதாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இருப்பினும் ஆனந்துடன் அவர் தொடர்ந்து பழகி வந்தார். இந்த நிலையில் கீதாவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த வெறோரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்து கண்டித்தபோது சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கைதான ஆனந்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story