மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்


மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 1 May 2019 10:30 PM GMT (Updated: 1 May 2019 8:27 PM GMT)

மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

குளித்தலை,

மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். குளித்தலை பெரியார்நகர் பகுதியில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜானகிராமன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story