தண்ணீர் பந்தலில் குவளையை எடுத்து சென்ற போலீஸ்காரர்


தண்ணீர் பந்தலில் குவளையை எடுத்து சென்ற போலீஸ்காரர்
x
தினத்தந்தி 4 May 2019 10:15 PM GMT (Updated: 4 May 2019 8:55 PM GMT)

தண்ணீர் பந்தலில் குவளையை எடுத்து சென்ற போலீஸ்காரர் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு பேட்டை பள்ளிவாசல் அருகில் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தலில் வைக்கப்படும் சில்வர் குவளைகள் அடிக்கடி காணாமல் போனது. சில்வர் குவளைகளை யார் எடுத்து செல்வது என்பதை கண்டுபிடிக்க அப்பகுதி இளைஞர்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, பள்ளிவாசல் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த சில்வர் குவளைகளை காணவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை இளைஞர்கள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரவு ரோந்து பணிக்கு சென்ற இரு போலீசாரில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த ஒரு போலீஸ்காரர் தண்ணீர் பந்தலில் இருந்த சில்வர் குவளையை எடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் மேற்பனைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story