செய்யூர் அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை


செய்யூர் அருகே நர்சு தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2019 10:00 PM GMT (Updated: 4 May 2019 8:59 PM GMT)

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வயலூருக்கு வந்தார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வயலூரை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 21). சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வயலூருக்கு வந்தார். அப்போது அவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தாங்கமுடியாமல் புவனேஸ்வரி கடந்த 29-ந்தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூனாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story