சென்னிமலையில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது


சென்னிமலையில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 May 2019 10:15 PM GMT (Updated: 4 May 2019 9:45 PM GMT)

சென்னிமலையில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

சென்னிமலை அருகே உள்ள குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் வேலை காரணமாக சென்னிமலைக்கு வந்து சென்றபோது 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 8-ம் வகுப்பு தேர்வை இந்த ஆண்டு எழுதி உள்ளார்.

இந்தநிலையில் மாணவியை ராமு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ராமு அந்த மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். அங்கு வந்த மாணவியின் பெற்றோர் அதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து ராமு தப்பி சென்றுவிட்டார்.

அதன்பின்னர் மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, மாணவியை ஆசை வார்த்தை கூறி ராமு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ராமுவின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story