பெரியபாளையம் அருகே 4 கோவில்களில் திருட்டு


பெரியபாளையம் அருகே 4 கோவில்களில் திருட்டு
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 5 May 2019 4:05 PM GMT)

பெரியபாளையம் அருகே 4 கோவில்களில் திருட்டு நடந்துள்ளது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ளது அமிதாநல்லூர் ஊராட்சி. இங்கு உள்ள காடாநல்லூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில், லட்சுமி அம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், முனுசாமி கோவில் என 4 கோவில்கள் உள்ளன. நேற்று காலை பெரியாண்டவர் கோவிலை திறக்க பூசாரி துரைசாமி வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.8 ஆயிரம், சாமி கழுத்தில் இருந்த ½ பவுன் தங்கத்தாலி, உண்டியல் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த கோவிலுக்கு அரு கில் இருந்த கோவில்களான லட்சுமி அம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், முனுசாமி கோவில் போன்றவற்றை பார்வையிட்டனர். அந்த கோவில்களிலும் உண்டியல்கள், டேப் ரிக்கார்டர் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து துரைசாமி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்லியம்மன் கோவிலில் 4-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story