அரூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - பெண்ணுக்கு தீவிர சிகிச்சை


அரூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 7:19 PM GMT)

அரூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரூர்,

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகன் முனியப்பன் (வயது26). தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி மோனிஷா (28). இவருக்கும், முனியப்பனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த பெருமாள், மனைவி மோனிஷா மற்றும் முனியப்பனை கண்டித்து வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் 2 பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அவர்கள் 2 பேரும் தனிமையில் இருப்பதை பெருமாள் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவி மோனிஷா மற்றும் முனியப்பனை மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர்கள் 2 பேரும் நேற்று வனப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் தொழிலாளி முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோனிஷா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மோனிஷாவை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிசிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story