இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு ‘லிப்ட்’ கொடுப்பது போல் அழைத்து சென்று கைவரிசை
மணவாளக்குறிச்சி அருகே ‘லிப்ட்‘ கொடுப்பது போல் அழைத்து சென்று இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணவாளக்குறிச்சி,
வெள்ளிச்சந்தை தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கில்டா கேத்ரின் (வயது 35). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரி டென்சிலி, மணவிளையில் வசிக்கி றார். கில்டா கேத்ரின் தனது சகோதரி வீட்டுக்கு எப்போதும் நடந்து செல்வது வழக்கம்.
அதே போல் சம்பவத்தன்று கில்டா கேத்ரின் தனது சகோதரி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர், கண்ணன்குளம் பகுதியில் செல்லும் போது, மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு மர்ம ஆசாமி, ‘லிப்ட்‘ தருவதாக கூறி, அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர், மணவாளக்குறிச்சி உரப்பனவிளை பகுதியில் கில்டா கேத்ரினை இறக்கி விட்டார். அப்போது, திடீரென அந்த ஆசாமி கில்டா கேத்ரின் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த கில்டா கேத்ரின் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி மின்னல் வேகத்தில் சென்று விட்டார். சகோதரியின் வீட்டுக்கு சென்ற கில்டா கேத்ரின் நடந்த சம்பவத்தை டென்சிலியிடம் கூறினார்.
பின்னர், இதுகுறித்து டென்சிலி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெள்ளிச்சந்தை தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கில்டா கேத்ரின் (வயது 35). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரி டென்சிலி, மணவிளையில் வசிக்கி றார். கில்டா கேத்ரின் தனது சகோதரி வீட்டுக்கு எப்போதும் நடந்து செல்வது வழக்கம்.
அதே போல் சம்பவத்தன்று கில்டா கேத்ரின் தனது சகோதரி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர், கண்ணன்குளம் பகுதியில் செல்லும் போது, மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு மர்ம ஆசாமி, ‘லிப்ட்‘ தருவதாக கூறி, அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர், மணவாளக்குறிச்சி உரப்பனவிளை பகுதியில் கில்டா கேத்ரினை இறக்கி விட்டார். அப்போது, திடீரென அந்த ஆசாமி கில்டா கேத்ரின் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த கில்டா கேத்ரின் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி மின்னல் வேகத்தில் சென்று விட்டார். சகோதரியின் வீட்டுக்கு சென்ற கில்டா கேத்ரின் நடந்த சம்பவத்தை டென்சிலியிடம் கூறினார்.
பின்னர், இதுகுறித்து டென்சிலி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story