ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் 27¾ பவுன் நகைகள் திருட்டு


ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் 27¾ பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 13 May 2019 10:15 PM GMT (Updated: 13 May 2019 10:01 PM GMT)

ராமநாதபுரம் நகரில் அடுத்தடுத்த வீடுகளில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 27¾ பவுன்நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை குறிஞ்சிநகரை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி ஜெயந்தி(வயது34). இவர் வீட்டை பூட்டிவிட்டு களை எடுக்க சென்றுவிட்டாராம். இந்த சமயம் பார்த்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

திரும்பி வந்து பார்த்தபோதுதிருடு போயிருப்பதை அறிந்த ஜெயந்தி அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மாரி என்பவரின் மனைவி சிவகாமி. இவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20¼ பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனர்.

திரும்பிவந்து பார்த்தபோது நகை திடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமி இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story