சோழவரம் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2 லட்சம் தப்பியது


சோழவரம் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2 லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 14 May 2019 9:05 PM GMT (Updated: 14 May 2019 9:05 PM GMT)

சோழவரம் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டது. லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2 லட்சம் தப்பியது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஆத்தூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

உடனடியாக இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

கடையை திறந்து பார்த்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.,2 லட்சம் தப்பியது.

இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story