திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,190 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,190 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 9:42 PM GMT)

திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பொதுவினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 1,190 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடியும், முன்பட்ட குறுவை பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பா சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

1,190 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 85 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,190 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story