பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை


பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 May 2019 10:15 PM GMT (Updated: 15 May 2019 10:03 PM GMT)

பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், எள், பயறு வகை பயிர்கள், எண்ணெய்வித்துக்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றது. இவற்றை பயிரிட வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் துறை விதை உற்பத்தியாளர்களும் விதை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த விற்பனையினை ஒழுங்கு முறைப்படுத்த கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை இந்த துறையில் பதிவு செய்து, பதிவு எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தனியார் ரகங்கள் மற்றும் வீரிய ரகங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும்.

நடவடிக்கை

அவ்வாறு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் உள்ள ரகங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, அவர்கள் மீது விதைகள் சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணையின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story