சேலத்தில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


சேலத்தில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 16 May 2019 10:00 PM GMT (Updated: 16 May 2019 4:36 PM GMT)

சேலத்தில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலைய பகுதிக்கு உட்பட்ட தில்லை நகர், கடைவீதி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக் கிழமை) மின்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருணாசல ஆசாரி தெரு, சிட்டு கோவில் தெரு, கல்லாங்குத்து ஒரு பகுதி, வ.உ.சி. மார்க்கெட், பெரியார் தெரு, கடைவீதி, வணிக வளாகம், பழைய பஸ் நிலையம், கோட்டை மாரியம்மன் கோவில் தெரு, முதல் அக்ரஹாரம், தேர் வீதி, ஆற்றோரம் தெரு, செரி ரோடு, மணல் மேடு, சாலை ரோடு, நடேசன் தெரு, பங்களா தெரு, சங்கராலயம், கன ராஜகணபதி தெரு, வாசக சாலை, கோகுல் நகர், காசி முனியப்பன் கோவில், அணைமேடு, தில்லை நகர், தில்லை நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல கிச்சிப்பாளையம் துணை மின்நிலைய பகுதிக்குட்பட்ட பில்லுக்கடை மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பஜார், குகை, களரம்பட்டி, தாதகாப்பட்டி, பிரிவுகளுக்குட்பட்ட கோவிந்தசாமி நகர், ஆறுமுக நகர், தாதுபாய்குட்டை, முருககவுண்டர் காடு, சி.சி. ரோடு, புலிகுத்தி மெயின்ரோடு, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சந்தாங்கி ஏரி, சாந்தி ஆஸ்பத்திரி ரோடு, அம்மாள் ஏரி, மூனாங்கரடு, பராசக்தி நகர், தர்மலிங்கம் தெரு, வேலுபுது தெரு, சீரங்கன் தெரு, அருணாசல மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை சேலம் நகர செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

Next Story