கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 7:03 PM GMT)

கீழ்வேளூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த தேவூர் மெயின் சாலையை சேர்ந்தவர் ஆசிக் முகமது. இவர் தேவூர் சந்தைப்பேட்டையில் செல்போன் மற்றும் காலணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆசிக் முகமது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை திறக்க ஆசிக் முகமது வந்தார். அப்போது மேற்கூரையின் ஆஸ்பெட்டாஸ் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.48 ஆயிரம், 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆசிக்முகமது கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story