சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது


சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 9:00 PM GMT (Updated: 17 May 2019 10:53 AM GMT)

வேலூரில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர், 

வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணிக்கு கிரீன் சர்க்கிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் சரக்கு ஆட்டோவில் வந்தவர் வேலூர் தோட்டப்பாளையம் தென்னைமரத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கலைவாணன் (வயது 25) என்பதும், பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கலைவாணனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story