கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கலெக்டர் தகவல்


கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:25 PM GMT)

வாடகைதாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டங்களுக்கு முறையே புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர், புதுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை மற்றும் கறம்பக்குடி தாலுகாக்களுக்கும், அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலர் அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி தாலுகாக்களுக்கும், இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குளத்தூர், இலுப்பூர், பொன்னமராவதி மற்றும் விராலிமலை தாலுகாக்களுக்கும் வாடகை பதிவு அலுவலர்களாக நகர்புற பகுதிகளுக்கு மட்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாடகை பதிவு அலுவலர்கள் அரசின் முன் அனுமதி பெற்று கலெக்டரால் நிய மனம் செய்யப்பட்டு உள்ளனர். முந்தைய வாடகை கட்டுப்பாடு, தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம் 1960-இல் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகை தாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2017-ல் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.

இந்த சட்டம் மற்றும் அதற்கான விதிகளை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இந்த சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. வாடகைதாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் இந்த சட்டத்தினை நடை முறைப்படுத்த வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ten-a-n-cy.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தகவல்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story