திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்


திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 6:56 PM GMT)

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் வாசன் நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 3 ஆண்டு முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. இசைப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போது மானது.

கல்வி கட்டணம்

நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணமாக ரூ.152 செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் சேர்க்கை அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story