ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அட்டை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய கோரி கவர்னருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அட்டை அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகள் சிறையில் உள்ள பேரறி வாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. அந்த தபால் அட்டைகளில், அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவு தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர தலைவர் காதர், மாவட்ட செயலாளர் அருளரசன் மற்றும் நிர்வாகிகள் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகள் சிறையில் உள்ள பேரறி வாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. அந்த தபால் அட்டைகளில், அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவு தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர தலைவர் காதர், மாவட்ட செயலாளர் அருளரசன் மற்றும் நிர்வாகிகள் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story