ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு


ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 7:39 PM GMT)

ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவு நாளான மே 21-ந் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.

பிரிவினை சக்திகளை எதிர்த்து

எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன நல அலுவலர் மஞ்சுளா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story