என்ஜினீயர் திடீர் சாவு - போலீசார் விசாரணை
என்ஜினீயர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் பிச்சையா. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 37). என்ஜினீயரான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. மேலும் இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீனாட்சிசுந்தரம் தன்னுடைய தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தார். பின்னர் வீட்டில் தனது அறையில் தூங்கிய மீனாட்சிசுந்தரம் திடீரென்று உயிரிழந்தார்.
நேற்று காலையில் தன்னுடைய மகன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிச்சையா, இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த மீனாட்சிசுந்தரத்தின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மீனாட்சிசுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் பிச்சையா. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 37). என்ஜினீயரான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. மேலும் இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீனாட்சிசுந்தரம் தன்னுடைய தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தார். பின்னர் வீட்டில் தனது அறையில் தூங்கிய மீனாட்சிசுந்தரம் திடீரென்று உயிரிழந்தார்.
நேற்று காலையில் தன்னுடைய மகன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிச்சையா, இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த மீனாட்சிசுந்தரத்தின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மீனாட்சிசுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story