தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
கந்திகுப்பம், பர்கூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில்
செல்பவர்களிடம் கடந்த 2 மாதங்களாக மர்ம நபர்கள்
செல்போன்கள் திருடி செல்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு
ராஜேந்திரன் மேற்பார்வையில் பர்கூர் இன்ஸ்பெக்டர்
செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைசெல்வி ஆகியோர்
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தேசிய நெடுஞ்சாலையில்
ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று
தனிப்படை போலீசார் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில்
ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை
பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம்
அடைந்த போலீசார் கந்திக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு 4
பேரையும் அழைத்து சென்று விசாரித்ததில், தேசிய
நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில்
செல்பவர்களிடம் இருந்து அவர்கள் செல்போன்கள் திருடியது
தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போன் திருட்டில்
ஈடுபட்ட கிருஷ்ணகிரி நகர் திருவண்ணாமலை சாலையை
சேர்ந்த இம்ரான்(21), 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது
செய்தனர். மேலும், அவர்களிடம் சுமார் ரூ.3.40 லட்சம்
மதிப்புள்ள 40 செல்போன்களை போலீசார் பறிமுதல்
செய்தனர்.
Related Tags :
Next Story






