மணவாளக்குறிச்சி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை


மணவாளக்குறிச்சி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2019 10:15 PM GMT (Updated: 5 Jun 2019 3:28 PM GMT)

மணவாளக்குறிச்சி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, மாவிளையை சேர்ந்தவர் தவசிமணி, கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுவித்ரா (வயது 19). இவர் வெள்ளமோடி அருகே உள்ள ஒரு கலை கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

நடந்து முடிந்த பருவ தேர்வில் சுவித்ரா தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த அவர் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்ற நிலையில் மாணவி சுவித்ரா மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவர் வீட்டின் பின் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்ப வந்த போது, சுவித்ரா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story