பளுகலில் துணிகரம் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பளுகலில் துணிகரம் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 10:15 PM GMT (Updated: 6 Jun 2019 2:49 PM GMT)

பளுகலில் பெண்ணிடம் 1¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள பகுதியான காரக்கோணத்தை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி லதா (வயது 48). இவர் குமரி மாவட்டம் பளுகல், ராமவர்மன்சிறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

பின்னர், அவர் ராமவர்மன்சிலை பகுதியில் சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி லதாவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென அந்த வாலிபர் லதாவின் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

இதில் சுதாரித்து கொண்ட லதா தங்க சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார். இதில் தங்க சங்கிலி இரண்டு துண்டுகளாக அறுந்து 1 பவுன் லதாவிடம் கிடைத்தது.  மீதியுள்ள 1¼ பவுன் கொள்ளையன் கையில் சிக்கியது.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனே, 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story