கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது


கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 6 Jun 2019 10:15 PM GMT (Updated: 6 Jun 2019 8:15 PM GMT)

கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது.

கரூர்,

கரூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் கரூரில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் கரூர், காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம்சாலை, கோவை ரோடு, வடிவேல்நகர், ராமானுஜம்நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில், வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்ப்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம்.

சின்னகாளிபாளையம், பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோவில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன்கோவில், புதுதெரு, மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், தாந்தோன்றிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி, வடக்கு, சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி, சோளம்பட்டி, துளசிக்கொடும்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

மின் நுகர்வோர்கள் வீடு, கடை, விவசாய தாழ்வழுத்த மின் இணைப்புகள் பழைய உரிமையாளர் பெயரிலேயே நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதை சிறப்பு முகாமில் பங்கேற்று தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.

மின் இணைப்பு உரிமையாளர் இறந்திருந்தால் பெயர் மாற்றம் செய்ய முந்தைய உரிமையாளரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ள இணைப்புகள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாது.

பெயர் மாற்றத்துக்கான படிவங்கள் கரூர் கோட்ட பிரிவு அலுவலகங்கள், கரூர் செயற்பொறியாளர் வருவாய் பிரிவு அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும். உரிய ஆவணங்களுடன், கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்து மின் நுகர்வோர் பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story