கார் கவிழ்ந்து குன்றக்குடி அடிகளாரின் உதவியாளர் உள்பட 4 பேர் காயம்


கார் கவிழ்ந்து குன்றக்குடி அடிகளாரின் உதவியாளர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Jun 2019 10:45 PM GMT (Updated: 9 Jun 2019 7:25 PM GMT)

கார் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

புதுக்கோட்டை,

குன்றக்குடி அடிகளாரின் தனி உதவியாளர் ராஜ்குமார் (வயது 39)். இவர் நேற்று தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் சென்று விட்டு புதுக்கோட்டை வழியாக சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமார், அய்யப்பன்(51), மரகதவள்ளி (61),, ஸ்ரீஹரி(8) ஆகியோர் காயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story