மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளை 11,035 பேர் எழுதினர்


மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளை 11,035 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 9:26 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளை 11 ஆயிரத்து 35 பேர் எழுதினர்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முதல்தாள் தேர்வை 7 மையங்களில் 2,505 பேர் எழுதினர். இந்த நிலையில் நேற்று 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதற்காக நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 31 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 348 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 1,313 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 11 ஆயிரத்து 35 பேர் தேர்வை எழுதினர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்த வரையில் 128 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 108 பேர் தேர்வை எழுதினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த தேர்வு மையங்களை பள்ளி கல்வித்துறையின் துணை இயக்குனர் அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ், உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story